head


வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி!

|Wed 27th May 2020 11:20 AM|| Page Views: 2

கர்நாடக மாநிலத்தில் வரும் 1 -ம் தேதி முதல் கோவில்,ஆலயம் ,பள்ளிவாசல் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 4 வது முறையாக கடந்த 17 ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு அனைத்து மத வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டன. 4-ம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட ஒரு சில தளர்வுகளுடன் வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு அனைத்து தரப்பிடம் இருந்தும் கோரிக்கை எழுப்பப்பட்டது.

இது குறித்து மாநில அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி கூறி இருப்பதாவது: பல்வேறு தரப்பில் இருந்தும் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு கோரிக்கை வந்தது இது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் விவாதித்தோம். அதன்படி வரும் ஜூன் 1 ம் தேதி முதல் கோயில்கள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் 31 ம் தேதிக்குள் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் . 51 கோவில்களுக்கான ஆன்லைன் முனபதிவு புதன்கிழமை முதல் துவங்கும் என முஸ்ராய் அமைச்சர் கூறினார்.

மேலும் கோவில்களில் அன்றாட நடவடிக்கைகள் தொடரும். அதே நேரத்தில் மத கண்காட்சிகள், மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படமாட்டாது. பிற மத வழிபாட்டு தலங்களுக்கும் இது பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அமைச்சர் அறிவிப்பு வெளியான போதிலும் அதிகாரப்பூர்வ உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.