பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் - கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு!
|Sat 30th May 2020 09:40 AM|Defence|
Page Views: 2
பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹமட் சாட் கட்டாக், கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தை நேற்று முன் தினம் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் சந்தித்தார்.
சந்திப்பின் இறுதியில் செய்தியாளர்களுக்கு தமது விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், கொரோனா பேரிடர் இலங்கையைத் தாக்குவதற்கு முன்னர் தாம் இலங்கைக்கு வந்ததாகவும், அதன் பின்னர் குறித்த பேரிடர் காரணமாக தமக்கு பாகிஸ்தானிற்கு திரும்பவும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
தாம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் தனது கதையை ஒரு புத்தகமாக எழுத ஆரம்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நல்லதோர் புரிந்துணர்வு இடம்பெற்றுவரும் நிலையில், தமது கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் ஊடாக மாகாணத்தில் உள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தாம் உதவுவதற்கு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்
கிழக்கு மாகாணத்தின் வர்த்தக நடவடிக்கைகளை கட்டியெழுப்புவது தொடர்பாகவும், கல்வி சம்பந்தமான புலமைப்பரிசில் திட்டங்கள் சம்பந்தமாகவும், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவது தொடர்பிலும் குறிப்பாக சமயம் சார்ந்த சுற்றுலாத்துறையின் விருத்தி தொடர்பாகவும், ஆளுநருடனான சந்திப்பின்போது தாம் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.