சென்னையில் 750 படுக்கை வசதியுடன், நூலகம், வைபை, டிவி வசதியுடன் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை, முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலில், நாட்டில் 2வது இடத்தில் உள்ளது தமிழ்நாடு. இதில் சென்னை அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தமிழக அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை - கிண்டியில் உள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டடம், கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 750 படுக்கை வசதிகளுடன் தயாராகி உள்ள இந்த மருத்துவமனையில், 70 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.