ராமேஸ்வரம் புகையிரத போக்குவரத்து அடுத்த ஆண்டு ஆரம்பம்!
|2023-01-25 10:42:46|General|
Page Views: 40
ராமேஸ்வரம் பாம்பன் புகையிரத பாலத்தின் மறுசீரமைக்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவடைந்தாலும், புகையிரத நிலைய சீரமைப்பு பணிகள் நடக்கும் என்பதால், இந்த ஆண்டு முழுவதும் ராமேஸ்வரத்திற்கு புகையிரத போக்குவரத்து நடைபெறாது எனவும் அடுத்த ஆண்டில் தான் புகையிரத போக்குவரத்தை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை இணைக்க கடலுக்குள் அமைந்துள்ளது.
புகையிரத பாதுகாப்பு ஆணையம்
பாம்பன் புகையிரத பாலம். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி இரவு ராமேஸ்வரத்திற்கு பயணிகளுடன் புகையிரத ஒன்று வரும்போது தூக்குப்பாலத்தில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டன. இது பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மூலம் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பாம்பன் புகையிரத பாலத்தில் பயணிகள் புகையிரத போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.