head


தரம்வாய்ந்த துணிகள் உற்பத்திக்கு பணிப்பு!

|Tuesday, 29th September 2020|General| Page Views: 31

அடுத்த வருடம் முதல் நாட்டின் தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். கொழும்பை அண்மித்து அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களை நேற்று பார்வையிட்டபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவற்றைத் தயாரிப்பதற்கான பொருட்களை உள்நாட்டிலே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும் சிறிய அளவிலான உள்ளூர்

உற்பத்தியாளர்கள் உடனடியாக உயர் தரத்திலான துணிகளை உற்பத்தி செய்யவதற்கு ஆரம்பிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.