head
Join Us


ஹிஸ்புல்லாவுக்கு முழு ஆதரவு வழங்கவுள்ளதாக ஈரானின் புதிய ஜனாதிபதி உறுதி

|2024-07-10 10:37:11|General| Page Views: 110

ஹிஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் உறுதியளித்துள்ளார்.

ஈரானில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில், சீர்திருத்தவாத கட்சி வேட்பாளர் மசூத் பெசெஸ்கியன் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் – காசா போர் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,

ஈரானின் அரசு ஊடகமொன்றினூடாக, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு, ஈரான் அரசு முழு ஆதரவு வழங்குவதாக அவ்வமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவுக்கு உறுதியளித்துள்ளார்.

இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள அட்டூளியங்களை நிறுத்த ஹிஸ்புல்லா போன்ற எதிர்ப்பு இயக்கமே தீர்வு என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு அருகாமையில் அமைந்துள்ள லெபனானில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இயங்கி வருகின்றது.

ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக கடந்த 8 மாதங்களாக பலஸ்தீனிய நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.