head
Join Us


13 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது !

|2024-07-11 09:28:10|General| Page Views: 78

இலங்கை (Sri Lanka) கடற்பரப்பில் அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கைது நடவடிக்கை இன்று (11.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் (Jaffna) காரைநகர் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த 13 இந்திய கடற்றொழிலாளர்களையுமே எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதான கடற்றொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.