ரஸ்யா(Russia) பயணத்தை முடித்து விட்டு ஆஸ்திரிய(Austria) நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) முன்னிலையில் அந்நாட்டு கலைஞர்கள் வந்தே மாதரம் பாடலை பாடியுள்ளனர்.
மூன்று நாள்கள் பயணமாக ரஷியா மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணமாகியுள்ளார்.
ரஸ்ய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியாவுக்கு பயணமாகியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வந்தே மாதரம் பாடலை இசையமைத்து அந்நாட்டு கலைஞர்கள் மோடி முன்னிலையில் பாடிக்காட்டியுள்ளனர்.
குறித்த காணொளியை தனத சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ள இந்திய பிரதமர், ஆஸ்திரியா துடிப்பான இசைக் கலாச்சாரத்துக்கு பெயர் பெற்றது.
வந்தே மாதரத்தின் இந்த அற்புதமான இசையமைப்பினால் எனக்கு ஒரு பார்வை கிடைத்தது. சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரிய நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.