வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்படும் போதும், தேசிய கீதம் இசைக்கப்படும் போதும் மதகுருமார் எழுந்து மரியாதை செலுத்தாத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற சுதந்திர நிகழ்வின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா (Anura Kumara Dissanayake) பதவியேற்பு நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பௌத்த மதகுரு உட்பட அனைத்து மதகுருமாரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியிருந்தனர்.
அந்த முன்னுதாரணமான செயற்பாட்டை நாட்டு மக்கள் வரவேற்றிருந்தனர்.
இந்தநிலையில், வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதகுருமார் தேசிய கொடி ஏற்றும் போதும், தேசிய கீதம் இசைக்கும் போதும் எழுந்து மரியாதை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தமது இடத்திலேயே அமர்ந்திருந்து அதனை பார்வையிட்டுக் கொண்டிந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாய் நாட்டை விட மத தலைவர்கள் என்ற நிலை பெரியதா என அதனை பார்வையிட்ட பலரும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.