நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்துள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் !

user 18-Mar-2025 இலங்கை 290 Views

2025 வரவு செலவு திட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படாமையால் 19 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (18) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

இந்தநிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் துணை வைத்திய நிபுணர்கள் (Paramedical) அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று (18) ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்பட்டு, ஏமாற்றத்துடன் வீடு சென்றதை அவதானிக்க முடிந்தது.

மாதாந்த கிளினிக்காக வந்த, நீரிழிவு நோயாளர்கள் மருந்துகள் எதுவும் வழங்கப்படாமையினால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றனர்.

அதேபோன்று வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும், மருந்துகள் இன்றி, வீடு சென்றனர். விடுதியில் இருந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களுக்கும் மருந்துகள் வழங்கப்படவில்லை. அதனால், அவர்களும் ஏமாற்றத்துடன் வீடு காணக்கூடியதாக இருந்தது.

இன்றைய தினம் நாடுபூராகவும் மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

Related Post

பிரபலமான செய்தி