பக்கவிளைவுகள் இன்றி தீர்வு தரும் சிக்குன்குனியா...

user 16-Jun-2025 இலங்கை 39 Views

நா ட்டில் டெங்கு நோய் போன்றே சிக்குன்குனியா நோயும் அதிகரித்து வருவதை இக்காலத்தில் காண முடிகிறது. டெங்கு நோயைப் போலன்றி, இந்த நோய் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதையும் குறிப்பிட முடியும்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய மருந்துகளை விட ஹோமியோபதி சிறந்த தீர்வை பெற்றுத் தருவதுடன் அதற்கான பரிந்துரைகளும் அந்தத் துறை சார்ந்த மருத்துவர்களால் முன்வைக்கப்படுகின்றது.

 

சிக்குன்குனியா என்ற நோய் அல்பா வைரஸ் தொற்றுநோயாகும். ஏடிஸ் எஜிப்டஸ் மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் நுளம்புகளினால் இந்நோய் பரப்பப்படுகின்றது.

சிக்குன்குய்யாவின் அறிகுறிகள் பொதுவாக பாதிக்கப்பட்ட நுளம்பு குத்திய 3-7 நாட்களுக்குப் பிறகும் தோன்றலாம். மிகவும் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் கடுமையான மூட்டு வலி. இது பலவீனப்படுத்தும். இவ்வலியானது வாரங்கள் அல்லது மாதங்கள் கூட நீடிக்கும்.

தலைவலி, தசைவலி, மூட்டு வீக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் சொறிச்சல் ஆகியவை பிற பொதுவான அறிகுறிகளாகும்.

 

சிக்குன்குனியா பொதுவாக தானாகவே குணமாகும் என்றாலும், அலட்சியப்படுத்தினால் சிக்கல்கள் ஏற்படலாம். அவற்றுள், நாள்பட்ட மூட்டு வலி மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீடிக்கும். அது தொடர்ச்சியான மற்றும் பலவீனப்படுத்தும் மூட்டு வலி ஆகும்.

நாம்பியல் சிக்கல்கள்: மூளைக்காய்ச்சல் அல்லது மூளைக்காய்ச்சல் போன்ற நரம்பியல் பிரச்சினைகள் அரிதான நிகழ்வுகள் ஆகும்.

பார்வை சிக்கல்கள்: அரிதாக வெண்படல அல்லது யுவைடிஸ் போன்ற கண் பிரச்சினைகள் ஏற்படலாம்.

 

பெரும்பாலும் அலோபதி மருத்துவர்கள் சக்திவாய்ந்த வலி நிவாரணிகளை பரிந்துரைக்கின்றனர். ஆனால் அவற்றை நீண்ட காலமாக பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு, இரைப்பை அழற்சி போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்கக் கூடும். எனினும் ஹோமியோபதி மருந்து எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நோயாளிகளை குணப்படுத்துகிறது. இது நிரந்தரமான தீர்வு என்பதுடன் மனித உடலின் நிரந்தர மறுசீரமைப்பாகும். ஹோமியோபதி அரச மருத்துவமனை மையங்கள் நாடு முழுவதும் உள்ளன. அவற்றில் யார் வேண்டுமானாலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறலாம்.

ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொள்வதால் மேற்படி அனைத்து சிக்கல்களையும் குணப்படுத்த வழிவகைகள் உள்ளன.

24 மணி நேர சேவையைப் பெறுவதற்கு அரச ஹோமியோபதி மருத்துவமனை, ஷெல்டன் ஜெயசிங்க மாவத்தை, ராகம வெலிசறை என்ற முகவரியை நாட முடியும்.

Related Post

பிரபலமான செய்தி