இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் விடுத்த எச்சரிக்கை..

user 01-Jun-2025 இலங்கை 51 Views

ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் முறைகேடுகள் திருத்தபடாவிடின் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது.

இதன் பொழுது இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வி திணைக்களத்தின் இடமாற்ற கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வெளி மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணியாற்றுவதனை தடுப்பது சங்கத்தின் நோக்கமல்ல எனவும் ஆசிரியர்கள் ஏமாற்றபடாது வெளிமாவட்டங்களில் அவர்கள் ஆற்றவேண்டிய காலத்தை வரையறுக்குமாறும் குறித்த கூட்டத்தில், தொழிற்சங்க தீர்மானம் தொடர்பில் பிரஸ்தாபிக்கபட்டது.

Related Post

பிரபலமான செய்தி