நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நேற்று முதல் இன்று மாலை 04.00 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பதுளை – பாததும்பர,பன்வில, மெததும்பர குருணாகல் – ரிதிகம மாத்தளை – லக்கலை, பல்லேகம, நாவுல, பல்லேபொல ஆகிய பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கண்டி – உடுதும்பர, தொலுவ மாத்தளை – இரத்தோட்டை, வில்கமுவ , யட்டவத்தை, உக்குவளை ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.